முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களுள் ஒருவரான சாந்தனை, விரைவாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சாந்தனை நாட்டுக்கு திருப்பியழைப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேற்படி விடயம் தொடர்பாக நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடினார். அமைச்சரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டுள்ள ஜனாதிபதி, அதற்கு இணக்கம் தெரிவித்ததுடன் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்