பலாங்கொடை இ/ சீ சீ.தமிழ் மகா வித்தியாலயத்தில் கடமையாற்றிய அதிபர் திரு.பீ. தம்பிராஜா தனது 37 வருட சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
மூன்று வருடங்கள் சேவைக்காலத்தை நிறைவு செய்யும் இவர் ஆசிரியராகவும் அதிபராகவும் பல பாடசாலைகளில் கடமையாற்றியவர். பல தூர பிரதேச கஷ்டப் பாடசாலைகளில் கடமையாற்றிய இவர் மாணவர்களின் சிறப்பான எதிர்காலத்துக்கு வித்திட்டவர். இறுதியாக இ/ பலாங் கொட இ/சீ.சீ.தமிழ் மகா பணியாற்றிய இவர் கல்வி நிர்வாகம், இணைபாட விதானம் என பல துறைகளிலும் மேலோங்க செய்து பாடசாலையின் வளர்ச்சியை அடையாளப்படுத்த தன்னை அர்ப்பணித்தவர். இப்பிரதேசத்தில் மக்களின் அபிமானம் பெற்ற ஒரு சிரேஷ்ட அதிபராகவும் இவர் விளங்குவது குறிப்பிடத்தக்கது.
இரத்தினபுரி சுழற்சி நிருபர்