பாராளுமன்றத்தில் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்றும் (23) நாளையும் (24) எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்ற குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு தொடர்பான விவாதம் இன்று (23) பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் தற்போது பாராளுமன்றம் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தற்போது சபாநாயகர் மஹிந்த யாபா தலைமையில் குறித்த கூட்டம் இடம்பெற்று வருகின்றது.
இன்று (23) பாராளுமன்றம் மு.ப. 9.30 மணிக்கு கூடியது. அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்களை அடுத்து, மு.ப. 10.00 மணியளவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய பாராளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக, சபாநாயகர் அறிவித்தார்.
விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள குறித்த விவாதத்தினை நடத்துவதை ஒத்தி வைக்குமாறு கோரி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எழுத்து மூலம் சபாநாயகர் மஹிந்த யாபாவிற்கு அவர் கடிதமொன்றின் மூலம் கோரிக்கையொன்றை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 23, 24: நிகழ்நிலை காப்புச் சட்டமூல விவாதத்தை ஒத்தி வையுங்கள்!
இதேவேளை, அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நேற்றையதினம் (22) உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்து.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக ஐ.ம.ச. உயர் நீதிமன்றில் மனு
இன்றைய பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரம்…
Online-Safety-Bill