Saturday, April 27, 2024
Home » பாகிஸ்தானிலும் ஈரான் ஏவுகணை தாக்குதல்

பாகிஸ்தானிலும் ஈரான் ஏவுகணை தாக்குதல்

by gayan
January 18, 2024 9:24 am 0 comment

அண்டை நாடான ஈரான் நடத்திய தாக்குதலில் இரு சிறுவர்கள் கொல்லப்பட்டு மேலும் மூவம் காயமடைந்ததாக பாகிஸ்தான் கூறியுள்ளது.

ஜெய்ஷ் அல் அதில் ஆயுதக் குழுவுடன் தொடர்புபட்ட இரு தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது. ஆனால், இதனை நிராகரித்திருக்கும் பாகிஸ்தான், சட்டவிரோதமான செயல் என கூறி இருப்பதோடு “தீவிர விளைவுகளுக்கு இட்டுச் செல்லும்” என்று எச்சரித்துள்ளது.

முன்னதாக ஈராக் மற்றும் சிரியா மீது தாக்குதல் நடத்திய பின்னர் மூன்றாவது நாடாகவே கடந்த செவ்வாய்க்கிழமை (16) பாகிஸ்தானிலும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் பலுகிஸ்தானின் தென்மேற்கு மாகாணத்தில் கிராமம் ஒன்றிலேயே ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஈரானிய பொலிஸ் அதிகாரிகள் பலர் கொல்லப்பட்ட கடந்த மாதம் எல்லையை ஒட்டி நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றுடன் தொடர்புபட்டே ஜெய்ஷ் அல் அதில் குழு மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT