Sunday, April 28, 2024
Home » டெய்லி நியூஸ் பிரதம ஆசிரியராக கேசர அபேவர்த்தன

டெய்லி நியூஸ் பிரதம ஆசிரியராக கேசர அபேவர்த்தன

by mahesh
January 3, 2024 6:00 am 0 comment

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஆங்கில நாளிதழான ‘டெய்லி நியூஸ்’பத்திரிகையின் பிரதம ஆசிரியராக சிரேஷ்ட ஊடகவியலாளர் கேசர அபேவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், தனது பதவியை உத்தியோகபூர்வமாக நேற்று (02) பொறுப்பேற்றார். இன்று 106 ஆண்டு நிறைவடையும் டெய்லி நியூஸ் பத்திரிகையின் 31 ஆவது பிரதம ஆசிரியராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

த ஐலண்ட் பத்திரிகையின் ஆசிரியர் பீடத்தில் 1988 இல் ஊடகத்துறைக்குள் பிரவேசித்த கேசர அபேவர்த்தன, டெய்லி மிரர் பத்திரிகையின் செய்தி ஆசிரியர், உதவி ஆசிரியர் பதவிகளை வகித்து 2015 முதல் கடந்த மே மாதம் வரை அதன் பிரதம ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். நேஷன் பத்திரிகையிலும் இவர், சில காலம் செய்தி ஆசிரியராக கடமை புரிந்துள்ளார்.

கல்கிஸ்ஸ புனித சென் தோமஸ் கல்லூரியில் கல்வி கற்ற கேசர அபேவர்த்தன, கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறை டிப்ளோமா பட்டம் பெற்றுள்ளார்.

அத்துடன் நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் வெகுஜன ஊடகத்துறை பட்டத்தையும் இவர் பெற்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT