யாழ். மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு கடந்த 31.12.2023 அன்று Doctor K. அரவிந்தன் (உட்சுரப்பியல் நிபுணர், யாழ்.போதனா வைத்தியசாலை) மற்றும் வைத்திய, தாதிய குழுவினர் வருகை தந்தனர். அவர்கள் இரட்ணம் அறக்கட்டளையின் அனுசரணையுடன் 2005 இல் இருந்து நடைபெற்று வருகின்ற நீரிழிவு நிலையத்திற்கு ஒழுங்காக வருகை தந்த 28 நோயாளர்களுக்கு இலவச வைத்திய ஆலோசனை வழங்கினர். இதற்காக மூன்று தினங்களாக குருதிப் பரிசோதனைகள் இரட்ணம் அறக்கட்டளையின் நிதி உதவியுடன் வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் நடைபெற்றது.
மேலும் அன்றைய தினம் நடைபெற்ற ஒன்றுகூடலில் மருத்துவர் அரவிந்தன், அனைவரது வேண்டுகோளுக்கு இணங்க புத்தாண்டில் இருந்து மாதம் ஒருமுறை அவர்களது நீரிழிவு நிலையத்திற்கு வருகை தருவதாகக் கூறினார்.
அவரது அறிவிப்பு அனைவருக்கும் மகிழ்ச்சியளித்தது. மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து வருகை தரும் நோயார்கள் மருத்துவர் அரவிந்தன் அவர்களின் வைத்திய ஆலோசனையைப் பெற முடியும் என்று மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை நிர்வாகத்தினர் அறிவிப்பு வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர்கள் அங்குள்ள முதியோர் பராமரிப்புப் பகுதியில் உள்ள 20 முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கியமை குறித்து பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.