111
அநுராதபுரம் வனஜீவராசிகள் திணைக்களத்திற்குட்பட்ட மதவாச்சி ஹெலம்பகஸ்வெவ பகுதியில் மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது. குறித்த காட்டு யானை 22 வயதுடைய பெண் யானை என வனஜீவராசி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த யானை ஹெலம்பகஸ்வெவ பகுதியில் உள்ள உழுந்து சேனை ஒன்றிற்குள் நுழைய முற்பட்டவேளையிலேயே மின்சார வேலியில் சிக்குண்டு (26) அதிகாலை உயிரிழந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வனஜீவராசிகள் திணைக்கள அநுராதபுரம் அலுவலகம் ஆரம்பித்துள்ளது.
அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்