98
பதுளை-கொழும்பு பிரதான வீதியில் பலாங்கொடைப் பிரதேசத்தில் நோயாளர்களை ஏற்றிச் சென்ற அம்பியூலன்ஸ் வண்டி விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயமடைந்து பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பதுளை பிரதான வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நோயாளர்களை ஏற்றிச் சென்ற அம்பியூலன்ஸ் வண்டி பலாங்கொடைப் பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி அருகிலுள்ள வாய்க்கால் ஒன்றில் விழுந்தமையால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்து காரணமாக அம்பியூலன்ஸ் வண்டி சாரதி, அதில் கடமை புரியும் இருவர் உட்பட ஐவர் படுகாயமடைந்த நிலையில் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
(பலாங்கொடை தினகரன் நிருபர்)