கிளிநொச்சி பூநகரி குளத்தின் மேற்பரப்பில் சூரிய மின்சக்தி திட்டத்தை நிறுவுவதற்கென, அவுஸ்திரேலியாவுடன் மின் கொள்முதல் ஒப்பந்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது எக்ஸ் தளத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, 1500 மெகாவோட் ஆற்றல் சேமிப்பு அமைப்புடனான 700 மெகாவோர்ட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யப்படவுள்ளது. இத்திட்டத்தில் முதலீடு செய்வதற்காக
அவுஸ்திரேலியாவின் யுனைடெட் சோலார் குழுமத்துடன் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. ஆயிரத்து 727 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டில், இந்த சூரிய மின்சக்தி திட்டம் நிறுவப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.