Tuesday, May 14, 2024
Home » இலங்கையின் ஆபத்தான 88 பேரை தேடும் இன்டர்போல்

இலங்கையின் ஆபத்தான 88 பேரை தேடும் இன்டர்போல்

by mahesh
December 13, 2023 7:00 am 0 comment

நாட்டிலிருந்து தப்பிச் சென்ற 88 குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கைது செய்ய சர்வதேச பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதையடுத்து, இவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ள சர்வதேச பொலிஸார், நீல அறிவித்தல் விடுத்துள்ளனர்.

இது குறித்து இலங்கை பொலிஸாருக்கு “இன்ரபோல்” தெரிவித்துள்ளது. இது தவிர, நாட்டிலிருந்து தப்பிச் சென்ற 41 போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு சர்வதேச பொலிஸார் சிவப்பு அறிவிப்பு விடுத்துள்ளனர்.

சிவப்பு அறிவித்தல் மூலம் இந்தியாவில் ஒன்பது பேர் கைதாகினர்.இந்நிலையில், இவர்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த வழக்குகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, இவர்கள் இலங்கையிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சர்வதேச பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT