Sunday, April 28, 2024
Home » ஜெரோம் பெனாண்டோவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

ஜெரோம் பெனாண்டோவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

- கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு

by Prashahini
December 13, 2023 12:50 pm 0 comment

பல்வேறு மதங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து கடும் விமர்சனத்துக்கு உள்ளான போதகர் ஜெரோம் பெனாண்டோவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (13) முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போதகர் ஜெரோம் பெனாண்டோ நவம்பர் 29 ஆம் திகதி வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய நிலையில், 48 மணிநேரத்திற்குள் CID யில் ஆஜராகி வாக்குமூலம் வழங்க வேண்டுமென, நீதிமன்றத்தினால் ஏற்கனவே வழங்கப்பட்ட உத்தரவுக்கமைய நவம்பர் 30 ஆம் திகதி காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முதல் நாளாக முன்னிலையாகி 8 மணித்தியாலம் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

மேலும், 2ஆவது நாளாக டிசம்பர் 1ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) வாக்குமூலம் வழங்குவதற்காக ஆஜராகியிருந்த நிலையில் வாக்குமூலத்தின் பின் அவர் CID அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT