152
சந்தேக நபர்களை தடுப்புக்காவலில் வைப்பதற்குப்பதிலாக அவர்களை வீட்டுக் காவலில் வைத்திருப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல்களை கருத்திற்கொண்டு, இந்த யோசனை முன்மொழியப்பட்டது.
தடுப்புக்காவலில் வைத்தல் மற்றும் சிறைச்சாலையில் வைப்பதற்கு பதிலாக சந்தேகநபர்களை வீட்டுக் காவலில் தடுத்து வைப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கென உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழு சமர்ப்பித்த அறிக்கையின் பிரகாரம் பொருத்தமான சட்டங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.