அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணிக்கு பயிற்சிப் போட்டியின்போது இனவாத சொற்பிரயோகத்தை பயன்படுத்தியதற்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை மன்னிப்புக் கேட்டுள்ளது.
அவுஸ்திரேலிய பிரதமர் பதினொருவர் அணிக்கு எதிராக நான்கு நாள் பயிற்சிப் போட்டியில் பாகிஸ்தான் ஆடிவரும் நிலையிலேயே இந்த சர்ச்சை எழுந்துள்ளது. மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த ஸ்கோர் போர்டில் பாகிஸ்தானுக்கு பதிலாக பாகி (பி.ஏ.கே.ஐ.) என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக குறிப்பிட்டு இருந்தனர்.
“பாகி” என்பது பாகிஸ்தான் அல்லது தெற்காசியாவில் பிறந்தவரை குறிப்பிடும் இழிச்சொல்லாக கருதப்படுகிறது. இது சமூக வலைதளத்தில் வைரலானதும் அந்த வார்த்தை திருத்திக் கொள்ளப்பட்டதுடன், தவறுக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை மன்னிப்பு கோரியது.
பாகிஸ்தான் அணி அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது. இதன் முதல் போட்டி எதிர்வரும் டிசம்பர் 14 ஆம் திகதி பேர்த்தில் ஆரம்பமாகவுள்ளது.