209
சென்னையில் பெய்த கடும் மழை மற்றும் மிக்ஜாம் புயலால் வீதிகள் நீரில் மூழ்கி, விமான நிலையமும் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால், விமானங்களுக்குள் வெள்ளநீர் புகுந்தன. மோசமான காலநிலையல் அங்கு மின்சாரமும் தடைப்பட்டது.
நான்கு மணிநேரத்தில், சராசரியாக 6.7 செ.மீற்றரளவுக்கு மழை பெய்தது. இதனால், தாழ்வான இடங்களில் மழை நீர் புகுந்ததால் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கி, ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
புனேவிலிருந்து சென்னை வந்து சேர வேண்டிய விமானங்கள் தாமதமாகின.
சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதித்தே புறப்பட்டன.