435
இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சம்மேளனம் நடாத்தும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட மூன்றாம் பிரிவு கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி 2ஆவது சுற்றுக்கு தெரிவானது.
மட்டக்களப்பு , கல்லடி, சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை (23) நடைபெற்ற இந்தப் போட்டியில் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியை எதிர்கொண்ட கல்முனை ஸாஹிரா எதிரணியை 92 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தியது.
தொடர்ந்த அந்த அணி 17 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
மாளிகைக்காடு குறூப் நிருபர்