இலங்கை ஊடகத்துறையில் தனித்துவமான பங்களிப்பை வழங்கிய இலங்கையின் லேக்ஹவுஸ் நிறுவன ஊடக கற்கை நிலையத்தால் நடத்தப்படும் ஊடக தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் ஊடக தொடர்பாடல் டிப்ளோமா கற்கைநெறிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது. இந்நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (23) மாலை 3.30 மணிக்கு நடைபெறும்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன மற்றும் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தலைமையில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
லேக்ஹவுஸ் நிறுவனத் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர காரியவசத்தின் வழிகாட்டலின் கீழ், சான்றிதழ் வழங்கும் விழா நடைபெறவுள்ளது. இலங்கையின் முன்னணி ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் குழு, முகாமைத்துவ குழு உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இங்கு ஊடக தொடர்பாடல் டிப்ளோமா பாடநெறியை கற்ற பத்து மாணவர்களுக்கும் டிஜிட்டல் ஊடக தொடர்பாடல் பாடநெறியை கற்ற 16 மாணவர்களுக்கும் டிப்ளோமோ சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.