தமிழக கடற்றொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டமை, மனிதாபிமான அடிப்படையிலானதென, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐ.சிறிரங்கேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். பருத்தித்துறை கடற்பரப்பில் கடந்த சனிக்கிழமை இரண்டு படகுகளுடன் 22 தமிழக கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன், இவர்கள் கைது செய்யப்பட்டு சில மணி நேரத்தில் அனைவரும் இவர்களின் இரண்டு படகுகளில் கடற்படையினரால் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போது,
இந்தக் கடற்றொழிலாளர்களின் படகானது இயந்திரக் கோளாறால் பழுதடைந்து கடலில் தத்தளித்த போது, இவர்களை கடற்படையினர் மீட்டு கரைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதன் பின்னர் படகு இயந்திரப் பழுதை திருத்தி, அதில் வந்தவர்களை மீள இவர்களின் நாட்டுக்கே கடற்படையினர் அனுப்பி வைத்தனர். இதனை நாம் மனிதாபிமான செயற்பாடாகவே பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
யாழ். குறூப் நிருபர்