குவைத் நாட்டின் இலங்கைக்கான மனிதாபிமான உதவி திட்டத்தின் கீழ் குவைத் ‘இஸ்லாமிய கெயா சொசைட்டி’ யின் நிதி ஒதுக்கீட்டில் பண்டாரகொஸ்வத்த கிராம பிரதான பள்ளிவாசலுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நீர் சுத்திகரிக்கின்ற இயந்திரம் பொருத்தப்பட்டு அண்மையில் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பண்டாரகொஸ்வத்த கிராமத்தில் அண்மைக்காலமாக கிட்னி நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். இதனை தடுக்கும் நோக்கில் பள்ளிவாசல் நிர்வாகம் அல்ஹிமா சமூக சேவை அமைப்பின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் நூறுல்லாஹ்விடம் விடுத்த வேண்டுகோளின்பேரில் இந்த நீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்பட்டு பணிப்பாளர் சகிதம் பள்ளிவாசல் நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரின் பங்குபற்றலுடன் அண்மையில் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.