115
சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள் பங்குகொண்ட இப்பேரணி மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிமனையின் முன்னால் ஆரம்பமாகி திருமலை வீதியூடாக மகாத்மா காந்தி பூங்காவை அடைந்தது. மாவட்ட தொற்றா நோய் தடுப்பு வைத்தியஅதிகாரி டாக்டர் இ.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணன் உட்பட அரச உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
(மட்டக்களப்பு குறூப் நிருபர் )