388
யாழ்.நல்லூர் முருகப்பெருமானின் கந்தசஷ்டி விரத உற்சவ பூஜைகள் சிறப்பாக இடம்பெற்றன.
இன்று (14) ஆரம்பிக்கப்பட்ட கந்தசஷ்டி விரத முதலாவது நாள் உற்சவத்தில் அலங்காரக்கந்தன் உள்வீதியூடாக இடவாகனத்தில் வீற்றிருந்து காட்சியளித்தார்.
எதிர்வரும் 18 ஆம் திகதி சூரசம்ஹார உற்சவம் இடம்பெற்று 19 ஆம் திகதி மாலை திருக்கல்யாண வைபவம் இடம்பெற்று இனிதே உற்சவம் நிறைவடையும்.
கந்தசஷ்டி விரத முதலாவது நாள் உற்சவத்தில் பல பகுதிகளில் இருந்து வருகைதந்த பக்தர்கள் இஷ்ட சித்திபெற்றுச் சென்றனர்.
கோப்பாய் குறூப் நிருபர்
பிரபாகரன் டிலக்சன் – யாழ்ப்பாணம்