Sunday, April 28, 2024
Home » வட மத்திய மாகாணத்திற்கு 325 புதிய அதிபர்கள் நியனம்

வட மத்திய மாகாணத்திற்கு 325 புதிய அதிபர்கள் நியனம்

ஆளுநரால் நியமனக் கடிதங்கள் நேற்று வழங்கி வைப்பு

by damith
November 7, 2023 10:00 am 0 comment

அதிபர் சேவை தரம் மூன்றிற்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த 325 புதிய அதிபர்களுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று (06) வடமத்திய மாகாண கூட்ட மண்டபத்தில் வழங்கி வைக்கப்பட்டது.

வடமத்திய மாகாணத்தில் சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களுக்கே இவர்கள் அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்ஜித் சமரகோன் ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிலையில் நேற்று வழங்கப்பட்ட புதிய நியமனங்களுடன் அதிபர்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டு வடமத்திய மாகாண பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் என மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT