294
மருதமுனை தாறுல் ஹுதா அரபு இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா கல்லூரி நிறைவேற்றுக் குழுத் தலைவர் வைத்திய கலாநிதி டாக்டர் ஏ.ஆர்.எம்.ஹாரிஸ் தலைமையில் இடம்பெற்றது.
கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி எம்.எல்.முபாறக் மதனி பட்டங்களை வழங்கி வைத்தார். சனி, ஞாயிறு (28,29) ஆகிய தினங்களில் இரு அமர்வுகளாக இடம்பெற்ற நிகழ்வுகளில் மௌலவியா நூறுல் ஐன் இஸ்மாயில், ஓய்வுநிலை ஆசிரியை திருமதி முனவ்வறா இஸ்மாயில் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர். முதலாம் நாள் அமர்வில் 212 மாணவிகளும் இரண்டாம் நாள் அமர்வில் 207 மாணவர்களுமாக 419 மாணவர்கள் பட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.
(பெரிய நீலாவணை தினகரன் நிருபர்)