171
மருதமடு திருத்தலத்தின் தேசிய செபமாலை பேரணி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இடம் பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை,குருநாகல் மறை மாவட்ட ஆயர் ஹெரல்ட் அன்ரனி பெரேரா ஆண்டகை, கொழும்பு மறை மாவட்ட துணை ஆயர் மெக்ஸ்வல் டி சில்வா ஆண்டகை, அநுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபர்ட் அன்றாடி ஆண்டகை ஆகியோரினால் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. திருப்பலியை தொடர்ந்து திருச் செபமாலை பவனி இடம் பெற்றதுடன் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து பக்தர்கள் இந்த சிறப்பு செபமாலை பவனியில் கலந்து கொண்டனர். (படங்கள்: லெம்பர்ட் ரொஷாரியன் (மன்னார் குரூப் நிருபர்))