லெபனானில் கட்டட இடிபாடுகளிலிருந்து இலங்கைப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.65 வயதுடைய இலங்கையரே கடந்த சனிக்கிழமை கட்டட இடிபாடுகளுக்குள்ளிருந்து மீட்டகப்பட்டார்.
கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிரிழந்த இவர், மாத்தறை பகுதியைச் சேர்ந்த ஐ. பிரேமலதா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
லெபனானில் குடியிருப்பு கட்டடம் கடந்த (17) இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கிய பல நபர்களில் ஒரு இலங்கைப் பெண்ணும் இருப்பதாக பெய்ரூட்டிலுள்ள இலங்கை தூதரகம் உறுதிப்படுத்தியது.லெபனானிலுள்ள மன்சூரியில் உள்ள ஐந்து மாடி கட்டிடம் அக்டோபர் 17 அன்று இடிந்து விழுந்தது,