கொழும்பு சாஹிரா கல்லூரி 80 வது குழுவின் 28ஆவது வருடாந்த பொதுக் கூட்டம் அண்மையில் கொழும்பு மெண்டரினா ஹோட்டலில் குழுவின் தலைவர் ஏ.எல்.அன்வர் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் அன்வர் அவர்களின் காலத்தில் அனைத்து திட்டங்களுக்கும் பங்களித்த அவரது குழு உறுப்பினர்களுக்கு பாராட்டுச் சின்னம் வழங்கப்பட்டன. செயலாளர் ஐயூப் காதர், முன்னாள் தலைவர் எம்.யூ.எம். அஸ்மி, உப தலைவர்கள் டி. எச். ரசீப், டாக்டர் ரிஸ்வான் ஜல்தீன், செயற்குழு உறுப்பினர்கள் டாக்டர் எம்.ஏ.சி. கமால்தீன், பாஹிம் மாஸ் அரூன் மற்றும் . மேமன் மனிதாபிமான சங்கத்தின் ஓ. ஏ. சத்தார் மற்றும் ஊடகத்துறையில் பங்களிப்பு வழங்கிய ஊடகவியலாளர்கள் ருஸைக் பாரூக் , அக்ரம் லூதிபி மற்றும் படப்பிடிப்பாளர் இன்பாஸ் சலாஹுதீன் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.
டாக்டர் எம்.ஏ.சி. கமால்தீன் அவர்கள் ஏ.எல். அன்வரைக் கௌரவித்ததுடன் பொன்னாடை போர்த்தி அவரது சேவைக்காக கௌரவித்தார். ஸாஹிரா கல்லூரி அதிபர் ரிஸ்வி மரிக்கார், கல்லூரி ஆளுநர் சபை தலைவர் பௌசுல் ஹமீட், முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
ருஸைக் பாரூக்