ஈரானிடமிருந்து பறிமுதல் செய்து உக்ரைனுக்கு வழங்கியது USA
அமெரிக்கா ஈரானிடம் இருந்து கடந்த ஆண்டு கைப்பற்றிய 1.1 மில்லியன் துப்பாக்கி குண்டுகளை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது.
கடந்த டிசம்பரில் யெமனை நோக்கி பயணித்த கப்பல் ஒன்றில் இருந்து இந்த துப்பாக்கி குண்டுகளை மத்திய கிழக்கில் செயற்படும் அமெரிக்க மத்திய கட்டளையகம் பறிமுதல் செய்திருந்தது.
ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் பயன்படுத்தும் வெடிபொருட்களின் வேகத்தை கையாள உற்பத்திகள் சிரமத்தை எதிர்கொண்டிருப்பதாக அதன் மேற்கத்தேய கூட்டணிகள் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் இந்த துப்பாக்கி குண்டுகள் கடந்த திங்கட்கிழமை உக்ரைனுக்கு அனுப்பப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. யெமன் சிவில் யுத்தத்தில் ஈரான் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு வழங்குகின்றபோதும் 2015 ஆம் ஆண்டின் ஐ.நா பாகாப்புச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றில் அந்தக் குழுவுக்கு அயுதம் வழங்குவது தடுக்கப்பட்டுள்ளது.