அமெரிக்காவின் வடக்கு கரொலினா மாநிலத்தில் தேடப்படும் குற்றவாளி ஒருவரை கைது செய்யும் முயற்சியின்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் நான்கு பொலிஸார் கொல்லப்பட்டு மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை (29) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வீட்டை நோக்கி வந்த பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பதோடு இதன்போது ஏற்பட்ட மோதலில் தாக்குதல்தாரி ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
மூன்று மணி நேரம் நீடித்த இந்த மோதலை அடுத்து மேலும் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சூடு நடத்திய வீட்டுக்குள் இருந்த பெண் ஒருவர் மற்றும் 17 வயது ஆடவர் ஒருவர் மீது விசாரணை நடத்தியதாக கூறப்பட்டது.
இதில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தது தொடர்பில் தேடப்படும் நபரை கைது செய்யும் முயற்சியிலேயே பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.