Monday, April 29, 2024
Home » மாதம்பை அல்மிஸ்பாஹ்வில் விஷேட பிரியாவிடை நிகழ்வு

மாதம்பை அல்மிஸ்பாஹ்வில் விஷேட பிரியாவிடை நிகழ்வு

by sachintha
October 6, 2023 9:54 am 0 comment

மாதம்பை அல்மிஸ்பாஹ் பாடசாலையில் நீண்ட காலமாக சேவையாற்றிய அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கான பிரியாவிடை வைபவம் அண்மையில் பாடசாலையின் அதிபர் ஏ.ஏ.எம். சாஹிர் தலைமையில் வெகு விமர்சையாக இடம் பெற்றது.

இந்நிகழ்வில் இடமாற்றம் பெற்றுச்சென்ற அதிபர், ஆசிரியர்கள் மற்றும் இவ்வாண்டு ஓய்வு பெற்ற ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். அந்த வகையில் இவ்வாண்டு இடமாற்றம் பெற்றுச் சென்ற முன்னாள் அதிபர் எஸ். சப்ராஸ் முஹம்மட் மற்றும் இவ்வாண்டு ஓய்வு பெற்ற பி.

எஸ் நாசிம் மெளலானா ஆசிரியர் அவர்களும் மற்றும் இடமாற்றம் பெற்றுச் சென்ற ஏனைய ஆசிரியர்களான எச்.எப் பஸ்லா ஆசிரியை, எம்.யூ.எப்.ரோஜன் ஆசிரியை, எப். ரஷீதா ஆசிரியை, எம்.ஆர்.டி விக்ரமசிங்க ஆசிரியை ஆகியோரு கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் அதிபர் தலைமை உரை ஆற்றியதோடு இந்நிகழ்வில் சிறப்பினராக கலந்து கொண்ட ஆசிரிய, ஆசிரியைகள் தனது அனுபவ பகிர்வுகளை மற்றும் ஏனைய வழிகாட்டல்களை பகிர்ந்ததோடு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின.

இந் நிகழ்வில் சிறப்பினராக கலந்து கொண்டவர்களுக்கு பாடசாலையின் ஆசிரியர் குழாம் மற்றும் பாடசாலை சமூகத்தினரான பாடசாலை அபிவிருத்திச் சங்க நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பாடசாலை பழைய மாணவர் அமைப்பினர் மற்றும் மெஸ்டா அமைப்பினர் சார்பாக பல அன்பளிப்புகள் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT