205
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 15,469 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் பெய்த கடும் மழையால் 9,506 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், 376 வீடுகள் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.