Sunday, April 28, 2024
Home » பாவோதல் போட்டியில் கிறேட்வெஸ்டன் பாடசாலை மாணவன் முதலிடம்

பாவோதல் போட்டியில் கிறேட்வெஸ்டன் பாடசாலை மாணவன் முதலிடம்

by sachintha
October 3, 2023 3:30 am 0 comment

மத்திய மாகாண தமிழ் மொழித்தினப் போட்டியில் பாவோதல் பிரிவில் முதலிடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்கு கிறேட்வெஸ்டன் பாடசாலை மாணவன் எஸ்.தனுபிரசாந் தெரிவாகியுள்ளார்.

இவரை பாராட்டும் முகமாக பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.பாரிஸ் மாணவனுக்கு பதக்கம் அணிவித்து கௌரவித்தார். மாகாண மட்ட தமிழ் மொழித்தின பாவோதல் பிரிவு 3 போட்டியில் 15 கல்வி வலயங்களுடன் போட்டியிட்டு மாணவன் முதலிடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை நுவரெலியா கல்வி வலயத்தின் கீழ் இயங்கும் மிகவும் கஷ்ட பிரதேச பாடசாலையான கிறேட்வெஸ்டன் பாடசாலை மாகாண மட்டத்தில் நடைபெற்ற ஆங்கில மொழி தின போட்டிகள் மற்றும் தமிழ் மொழித் தின போட்டிகளில் வெற்றி பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(தலவாக்கலை குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT