Saturday, May 4, 2024
Home » பொலிஸார் மற்றும் CIDயினர் இணைந்து விசாரணைகள் ஆரம்பம்
நீதிபதி சரவணராஜா பதவி விலகல் குறித்து

பொலிஸார் மற்றும் CIDயினர் இணைந்து விசாரணைகள் ஆரம்பம்

சட்டம் ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவிப்பு

by damith
October 2, 2023 7:20 am 0 comment

நீதிபதி சரவணராஜா குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டமை சம்பந்தமாக விசாரணைகள் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு அமைவாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக, நீதிபதிக்கு காணப்பட்ட உயிரச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பு நிலைமைகள் சம்பந்தமான முழுமையான விசாரணைகளை தற்போது பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். இந்த விசாரணைகளுக்கு புலனாய்வுப் பிரிவினரின் தகவல்களும் பயன்படுத்தப்படவுள்ளன.

விரைவில் முழுமையான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT