237
வியட்நாமின் மத்திய பகுதியில், கடும் வெள்ளத்தினால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆற்றங்கரைக்கு அருகே மீன் பிடிக்கச் சென்ற குறைந்தது ஒருவரைக் காணவில்லை. தண்ணீர், உணவு, மின்சார வசதிகள் இன்றி பலர் சிக்கியிருப்பதாகக் கூறப்பட்டது.
வள்ளத்தில் மரங்கள் அடித்துச்செல்லப்பட்டன. ஆயிரக்கணக்கான ஹெக்டர் அளவு பயிர்களும் சேதமாயின. பாதிக்கப்பட்ட இடங்களில் எச்சரிக்கை அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.
வாகனங்கள் அந்தப் பகுதிகளுக்குள் நுழையாமல் இருப்பதை உறுதிசெய்ய அதிகாரிகள் பணியில் இருந்தனர். அதிகாரிகள் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பவும் உதவினர்.