பேருவளை இக்ரா தொழில்நுட்பக்கல்லூரியின் பழைய மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ‘ஸ்தாபகர் தினம்’ இன்று 27ஆம் திகதி மு.ப 11. 00 மணிக்கு கல்லூரி மாநாட்டு மண்டபத்தில் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.
இக்ரா தொழில்நுட்பக்கல்லூரி பணிப்பாளர் வை.எல்.எம். றமீஸ் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் ஜாமியா நளீமிய்யா கலாபீட சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் அரபாத் கரீம் (நளீமி) எம்.ஏ. “நளீம் ஹாஜியார் மறைந்தும் மறவாத ஒரு முன்மாதிரி” எனும் தலைப்பில் விசேட உரை நிகழ்த்துவார்.
இன்றைய நிகழ்வின்போது பழைய மாணவர்களின் நிதியுதவியில் தொழில்நுட்பக்கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘Solar Power Project’ ஐயும் அதிதிகள் வைபவரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைப்பர்.
இந்நிகழ்வில் கல்லூரி விரிவுரையாளர்கள்,
பழைய மாணவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
(அஜ்வாத் பாஸி)