பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க தற்போது 11 இலட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படும் இக்காலை உணவுத்திட்டம், 22 இலட்சம் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக உலக உணவுத் திட்டம் அனுசரணை வழங்கவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களுக்கான இலவச பாடநூல் விநியோக ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு பேசும்போதே, அவர் இதனைத் தெரிவித்துளளார்.
அத்துடன், தற்போது 2024 ஆம் ஆண்டுக்கு அவசியமான பாடப்புத்தகங்களில் 50 வீதமானவை அச்சிட்டு முடிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார்.
தனியார் துறையினருக்கு வழங்கப்படவுள்ள பாடப்புத்தகங்களை அச்சிடும் நடவடிக்கை இரண்டு வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், டிசம்பர் 15 ஆம் திகதியளவில் பாடப்புத்தகங்களை அச்சிடும் அனைத்து பணிகளும் நிறைவு செய்யப்படுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.