Thursday, May 16, 2024
Home » கொழும்பு புனித தெரேசாள் ஆலயத்தில் உறுதி பூசுதல் வழிபாடு

கொழும்பு புனித தெரேசாள் ஆலயத்தில் உறுதி பூசுதல் வழிபாடு

by damith
September 12, 2023 11:27 am 0 comment

பல்வேறு விதமான பலம், ஆளுமை, அந்தஸ்து நம் மத்தியிலே காணப்பட்ட போதிலும் இறை விசுவாசத்தின் ஊடான தெய்வீக பலம் நமக்கு மிகவும் அவசியமாகும் என கொழும்பு உயர்மறை மாவட்ட துணை ஆயர் பேரருட்திரு என்டன் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

கொழும்பு திம்பிரிகஸ்யாய புனித தெரேசாள் ஆலயத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பிள்ளைகளுக்கு உறுதிபூசுதல் வழங்கும் திருச்சடங்கில் கலந்து கொண்டு உறுதி பூசுதல் வழங்கி விசேட திருப்பலியில் மறையுரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கீழ்ப்படிதல், நல்லொழுக்கம், விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்ட இறை நம்பிக்கையுடனான வாழ்க்கை தொடர்பில் வலியுறுத்தும் வகையில் அவரது மறையுரை அமைந்தது.

ஜெபம், இறைவனுடனான தொடர்பு தெய்வீக பலம்ஆகியன எமது வாழ்க்கைக்கு எந்தளவு அவசியப்படுகின்றது என்பதை அன்றைய நற்செய்தி வாசகத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் தனது மறையுரையில் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது. பங்குத்தந்தை அருட்திரு சந்தன பெரேரா அடிகளாரின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு வருகை தந்திருந்த துணை ஆயர் ஆலய பேன்ட் வாத்திய இசைக்குழுவால் வரவேற்கப்பட்டு ஆலயம் வரை அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த உறுதி பூசுதல் திருச்சடங்கில் முன்மொழிகளிலும் சுமார் 100 மாணவர்களுக்கு உறுதி பூசுதல் வழங்கப்பட்டது. அதனை அடுத்து ஆயறினால் நற்சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் உறுதி பூசுதல் பெற்ற மாணவர்கள் மற்றும் பங்குத்தந்தை, ஏனைய அருட்தந்தையர்கள் அருட் சகோதரிகள் மறை ஆசிரியர்களுடன் ஆயர் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்ட மையும் குறிப்பிடத்தக்கது.

எல். செல்வா படங்கள்: சுரேஷ்குமார்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT