Home » வட்டி கொடுமையால் இளம் குடும்பப் பெண் தற்கொலை

வட்டி கொடுமையால் இளம் குடும்பப் பெண் தற்கொலை

by Prashahini
September 5, 2023 9:43 am 0 comment

யாழ்ப்பாணம் சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் வட்டிக்கு பணம் பெற்று கடனில் சிக்கிய நிலையில் நேற்று (04) தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிள்றது.

ஓட்டுமடம் – யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 34 வயதான ஜெயராசா அருள்பாலினி எனும் 03 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண் மீற்றர் வட்டிக்கு பணத்தினை பெற்றுள்ளார். இந்நிலையில் வட்டியானது அதிகரித்தபடியால், வட்டிக்கு பணம் கொடுத்த தரப்பினரால் வீடு, லொறி, வாகனம், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி என்பன பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் மிகுதி வட்டிப்பணம் செலுத்தாததன் காரணமாக வட்டிக்கு பணத்தினை கொடுத்தவர்கள் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தன்னால் இனி உயிர்வாழ முடியாது என்றும், உயிரை மாய்க்கப் போவதாகவும் கணவனிடம் கூறியுள்ளார். அதற்கு கணவன், பத்து மாதத்தில் கைக் குழந்தை உள்ளது. எனவே, இவ்வாறு தவறான முடிவு எடுக்க வேண்டாம் என கூறிவிட்டு கோவிலுக்கு சென்றுள்ளதாகவும்,  கோவிலில் இருந்து மதியம் வீடு திரும்பியவேளை வீடானது பூட்டப்பட்டிருந்ததால், கதவினை திறந்து உள்ளே சென்று பார்த்தவேளை குறித்த பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

குறித்த பெண்ணின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டதோடு, பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலமானது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கரவெட்டி தினகரன் நிருபர்

தற்கொலையை தடுப்போம்!
நீங்கள் தனிமையில் இருப்பதாக உணருகின்றீர்களா அழையுங்கள்

தேசிய மனநல உதவி இலக்கம் 1926
இலங்கை சுமித்ரயோ 011 2696666
CCC line 1333

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT