1.4K
ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இன்று (19) பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.
நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் 2023 ஏப்ரல் 27 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் ஜூன் 21 மற்றும் ஜூலை 06 ஆகிய இரண்டு தினங்களிலும் இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து இன்று (19) இடம்பெற்ற சட்டமூலத்தின் குழு நிலையின் போது விஜேதாச ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களு எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட ஒரு சில திருத்தங்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.