Monday, April 3, 2023 - 3:12pm
கொழும்பு நகர மண்டபத்தில் உள்ள லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் செய்துள்ளனர்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய (IUSF) மாணவர்கள் குழுவொன்று, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குள் பிரவேசிக்க முற்பட்ட போதே, பொலிஸாரால் இவ்வாறு நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add new comment