இன்று திங்கட்கிழமையும் மின் வெட்டு கிடையாது

- டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 01 இலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது

இன்றையதினம் (26) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பண்டிகைக் காலம் கருதி நேற்முன்தினம் டிசம்பர் 24ஆம் திகதி சனிக்கிழமை, கிறிஸ்மஸ் தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) மற்றும் இன்று (26) திங்கட்கிழமை ஆகிய தினங்களில் மின் வெட்டு அமுல்படுத்தப்படாது என, கடந்த புதன்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.

இதேவேளை, எதிர்வரும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 01ஆம் திகதி ஆகிய நாட்களிலும் மின் வெட்டை அமுல்படுத்தாதிருக்க தீர்மானித்துள்ளதாக, மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு பின்னர் 2023 முதல் தினமும் 10 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தெரிவிக்கப்படும் கருத்துகளில் எவ்வித உண்மையுமில்லை என அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதன்போது தெரிவித்திருந்தார்.

ஜனவரி மாதத்திலும் தற்போது அமுல்படுத்துவது போன்று 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள் மற்றும் 20 நிமிடங்களுக்கு திட்டமிட்ட மின் மின்வெட்டினை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...