அமைச்சர்கள் ஹரின், மனூஷ மீது ஒழுக்காற்று நடவடிக்கை

அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமனறில் தெரிவித்தார்.

இன்றையதினம் (20) இடம்பெற்று வரும் பாராளுமன்ற அமர்வின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அரசாங்கத்துடன் இணைவது ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையல்ல எனவும், எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு அரசாங்கத்தின் சிறந்த தீர்மானங்களுக்கு ஆதரவு தருவதாகவே எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார் என சுட்டிக்காட்டினார்.

இன்றையதினம் (20) எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெனாண்டோ சுற்றுலா மற்றும் காணி அமைச்சராகவும், மனூஷ நாணயக்கார, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராகவும் இன்றையதினம் (20) ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க


Add new comment

Or log in with...