திருமலை - மட்டு வீதியில் பட்டித்திடல் பகுதியில் விபத்து; 26 பேர் வைத்தியசாலையில்

திருமலை - மட்டு வீதியில் பட்டித்திடல் பகுதியில் விபத்து; 26 பேர் வைத்தியசாலையில்-Accident-Mutur-Pattithidal-26 Hospitalised

திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதி தோப்பூர், பட்டித்திடல் பகுதியில் லொறி ஒன்றும் பஸ் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ்ஸில் பயணித்த 26 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து இன்று (10) காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

திருமலை - மட்டு வீதியில் பட்டித்திடல் பகுதியில் விபத்து; 26 பேர் வைத்தியசாலையில்-Accident-Mutur-Pattithidal-26 Hospitalised

அம்பாறையிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த தனியாருக்குச் சொந்தமான பஸ்ஸும், மூதூரிலிருந்து சேருவில நோக்கிச் சென்று கொண்டிருந்த லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

திருமலை - மட்டு வீதியில் பட்டித்திடல் பகுதியில் விபத்து; 26 பேர் வைத்தியசாலையில்-Accident-Mutur-Pattithidal-26 Hospitalised

இதில் அதிகளவில் அரச உத்தியோகத்தர்கள் வருகை தந்ததாகவும் இதுவரைக்கும் 26 பேர் காயமடைந்த நிலையில் மூதூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருமலை - மட்டு வீதியில் பட்டித்திடல் பகுதியில் விபத்து; 26 பேர் வைத்தியசாலையில்-Accident-Mutur-Pattithidal-26 Hospitalised

இவ்விபத்தில் வாகனத்தில் சிக்கிய டிப்பர் வாகனத்தின் சாரதி, சுமார் அரை மணி நேர போராட்டத்தின் பின் பொதுமக்களால் மீட்கப்பட்டதோடு, விபத்தில் அவரது கால்கள் சேதமடைந்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம், தோப்பூர் குறூப் நிருபர் - எம்.எம். நௌபீக்)


Add new comment

Or log in with...