Thursday, October 15, 2020 - 12:05pm
பதுளை - பண்டாரவளை பிரதான வீதி ஹாலிஎலபகுதியில் இன்று காலை (15/10) லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் ஒருவர் படுகாயமடைந்து பதுளை பொதுவைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லொறியின் சாரதி ஹாலிஎல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
(லுணுகல நிருபர் -நடராஜா மலர்வேந்தன்)
Add new comment