யானை தாக்கி 60 வயது நபர் பலி

ஹொரவபொத்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரஸ்னகவெவ பிரதேசத்தில் யானை தாக்கியதில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (15) மாலை இடம்பெற்றுள்ளது.

ரஸ்னகவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...