வெள்ளவத்தையில் புகையிரதம் மோதி ஒருவர் பலி

வெள்ளவத்தையில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று (10) மாலை இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.

தெஹிவளையிலிருந்து கொழும்பு, கோட்டை நோக்கி புறப்பட்ட புகையிரதம், குறித்த நபர் மீது மோதியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தெஹிவளை, களுபோவில பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


Add new comment

Or log in with...