திருகோணமலை, வெருகல் பிரதேச செயலகத்துக்குட்பட்ட இலங்கைத்துறை முகத்துவாரம் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வேள்ட் விஷன் நிறுவனத்தின் அனுசரணையுடன் கடற்றொழில் உபகரணங்கள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (12) வழங்கி வைக்கப்பட்டன.
பயனாளி ஒருவருக்கு இரண்டு இலட்சம் ரூபா பெறுமதிப்படி தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கடற்றொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டன. வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் தலைமையில் இந்த உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. கடற்றொழில் நடவடிக்கையையும் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் இவை வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் வேள்ட் விஷன் நிறுவனத்தின் அதிகாரிகள், துறைசார் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தம்பலகாமம் குறூப் நிருபர்