Wednesday, May 4, 2016 - 4:15pm
Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில், போக்குவரத்து மற்றும் பாதை பாதுகாப்பு தொடர்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் (DIG) அமரசிறி சேனாரத்ன விசாரணை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (04) இரகசிய பொலிஸாரால் அவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வசீம் தாஜுதீனின் உடல், வாகனம் ஒன்றில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டிருந்ததோடு, அது ஒரு விபத்தாக காட்டுவதற்கு கொலையாளிகள் முயற்சி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எனவே வாகன விபத்து மற்றும் பாதுகாப்பு என்பன தொடர்பில் பொறுப்பாக இருந்த குறித்த DIG என்ற வகையில் அவருக்கு ஏதேனும் சம்பந்தம் உள்ளதா என விசாரணை செய்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குறித்த விசாரணைகளைத் தொடர்ந்து மேலும் பல பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளும் விசாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Add new comment