Tuesday, February 16, 2016 - 11:30am
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்ட வழக்கிலிருந்து குமார வெல்கமவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு, உப தலைவரை நியமிப்பது தொடர்பில் ஊழல் இடம்பெற்றதாக தெரிவித்தே குறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் குறித்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குமார வெல்கம நீதிமன்றில் சமூகமளித்திருந்ததோடு, இதன்போது, நீதவான் அவரை ரூபா 25,000 பணம் மற்றும் ரூபா 10 இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யப்பட்டார்.
Add new comment