குளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உட்பட மூவர் பலி

சிலாபம், ஆரச்சிக்கட்டு - ஆனவிழுந்தாவ குருவில வாவியில் குளிக்க சென்ற மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன் மற்றும் அவர்களது உறவுமுறை சிறுவன் ஒருவருமே  இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வெயாங்கொடைவைச் சேர்ந்த, எச்.கே. சுமித்ர பிரியலால் (40) அவரது மகன் சானக சந்தருவன் (16) மற்றும் நல்லதரன்கட்டுவவைச் சேர்ந்த ரவிக துனஞ்சன (17) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.
 
மரணமடைந்த சுமித்ர பிரியலால், இராணுவத்தில் பணிபுரிபவர் என்பதோடு, தற்போது, காலி, புஸ்ஸ இராணுவ பயிற்சி முகாமில் சேவையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
 
கம்பஹாவில் வசிக்கும் இவர், நல்லதரன்கட்டுவ, போகஹவெட்டியவிலுள்ள தனது தம்பியின் வீட்டிற்கு விடுமுறைக்காக வந்த வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
அவர்களது சடலம், தற்போது சிலாபம் மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதோடு, பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Add new comment

Or log in with...