Tuesday, June 21, 2016 - 2:45pm
RSM
ஹலீமிடம் அஸ்வர் வேண்டுகோள்
மூத்த அரசியல்வாதியும் ஆளுநரும் தொழிற்சங்கவாதியும் அமைச்சருமான மர்ஹும் அலவி மௌலானாவின் நினைவாக அவரது நினைவு முத்திரை ஒன்றை வெளியிட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அலவி மெளாலானா, 60 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் ஆற்றிய சேவையை நினைவு கூரும் முகமாக விசேட தபால் முத்திரை வெளியிட வேண்டுமென முன்னாள் முஸ்லிம் விவகார அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர், முஸ்லிம் விவகார மற்றும் தபால் தொலைத் தொடர்புகள் அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீமிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
(எம்.எஸ்.எம்.சாஹிர்)
Add new comment