அநுராதபுரம் மாவட்ட கல்லஞ்சியாகம முஸ்லிம் வித்தியாலயத்திற்கு 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான Smart Board வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த புதன்கிழமை பாடசாலை அதிபர் எஸ்.எம். நுவைஸ் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இதற்கான நிதியுதவியினை வன்னி ஹோப் அவுஸ்திரேலியாவின் டாக்டர் மாலதி வாரன் வழங்கியிருந்ததோடு இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் கலந்துகொண்டு சிறப்பித்தார். கௌரவ அதிதிகளாக வன்னி ஹோப் அவுஸ்திரேலியாவின் இலங்கைக்கான பணிப்பாளர் எம்.டி.எம். பாரிஸ், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எ.ஆர். வசீம், மாவட்ட இணைப்பாளர் எஸ்.எம். அக்ரம், மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் பாஸ்கரன் ஆகியோரும் விஷேட அதிதியாக இப்பலோகம வலயக்கல்வி பணிப்பாளர் சட்டத்தரணி நிசாமும் கலந்து சிறப்பித்தனர்.
இவ்வாறான சேவைகளை தனது மாவட்டத்தில் மேற்கொள்வதையிட்டு தான் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், தமது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.
கெக்கிராவ குறூப் நிருபர்